ஜெர்மனியின் செந்தேன் மலரே
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்
(ஜெர்மனியின்)
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்
(சித்திரமே..)
பூஞ்சோலையே பெண்ணானதோ இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி
எந்நாளுமே கொண்டாடலாம்
லா ல வா வா வா
குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா வா வா
எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் ப ப ப ப பா
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்
(ஜெர்மனியின்)
பேரின்பமே என்றாலென்ன அதை
நீ என்னிடம் சொன்னாலென்ன
பேரின்பமே நீதானம்மா அதை
நீ என்னிடம் தந்தாலென்ன
லா ல லா வா வா
எனை அணைத்தே கதை சொல்ல
லா ல லா வா வா
அதைச் சொல்வேன் சுவையாக
வெகு நாளாக ஆசை ர ப ப ப பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்
(சித்திரமே)
(ஜெர்மனியின்)
ப ப பபபபா ப ப பபபபா....
0 Comments:
Post a Comment
<< Home