நான் ரசித்த திரை கவிதைகள் - ஸ்ரீதர்

இங்கு நான் ரசித்த சில திரை பாடல்கள் தர உள்ளேன் - - ஸ்ரீதர்

Sunday, June 04, 2006

ஒரு நாள் ஒரு கனவு - கண்ணுக்குள் நிலவு.

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம்
வெள்ளிப்பிறைப் படகெடுத்து ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம்
நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

நதியோரம் நதியோரம் என்னைச் சுற்றிப் பறந்தது கிளிக்கூட்டம்
கிளிக்கூட்டம் கிளிக்கூட்டம் வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம்
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உனைப்போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளிபோல் அவதரிக்க
இறக்கைகள் கொண்டு வா...விண்ணிலே பறப்போம்...
உள்ளங்கள் கலப்போம்...வண்ணம் சூடும் வண்ணக்கிளி

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தயோ ஹோ
உன் மனதை உன் மனதை எனைப்போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஒளிவிடும் முகத்தினிலே கறையேன் முத்த அடையாளங்களோ
இரவில் விழித்திருந்து நீதான் கற்றதென்ன பாடங்களோ
மின்னிடும் கண்ணிலே...என்னவோ உள்ளதே...
சொல்லம்மா சொல்லம்மா...நெஞ்சிலாடும் மின்னல் கொடி

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம்
வெள்ளிப்பிறைப் படகெடுத்து ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம்
நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

0 Comments:

Post a Comment

<< Home