நிலாவே வா.. -- மௌன ராகம்
நிலாவே வா.. செல்லாதே வா..
எந்நாளும் உன் பொன்;வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்;
நினைவாலே அணைப்பேன்...
நிலாவே வா.. செல்லாதே வா..
(இசை)
காவேரியா கானல் நீரா.. பெண்மை என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா.. சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறுபிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம்.. நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே.. சொல்லில் வைத்தாய் முள்ளை..
நிலாவே வா.. செல்லாதே வா..
(இசை)
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே..
ஒரே ஒரு வார்த்தை சொன்னாலென்ன மானே..
ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே..
நிலாவே வா.. செல்லாதே வா..
எந்நாளும் உன் பொன்;வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்;
நினைவாலே அணைப்பேன்...
நிலாவே வா.. செல்லாதே வா..
எந்நாளும் உன் பொன்;வானம் நான்