நான் ரசித்த திரை கவிதைகள் - ஸ்ரீதர்

இங்கு நான் ரசித்த சில திரை பாடல்கள் தர உள்ளேன் - - ஸ்ரீதர்

Monday, July 10, 2006

நிலாவே வா.. -- மௌன ராகம்

நிலாவே வா.. செல்லாதே வா..

எந்நாளும் உன் பொன்;வானம் நான்

எனை நீதான் பிரிந்தாலும்;

நினைவாலே அணைப்பேன்...



நிலாவே வா.. செல்லாதே வா..

(இசை)



காவேரியா கானல் நீரா.. பெண்மை என்ன உண்மை

முள்வேலியா முல்லைப்பூவா.. சொல்லு கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும் சிறுபிள்ளை

தாங்காதம்மா நெஞ்சம்.. நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீதானே.. சொல்லில் வைத்தாய் முள்ளை..



நிலாவே வா.. செல்லாதே வா..

(இசை)



பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட

கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே..

ஒரே ஒரு வார்த்தை சொன்னாலென்ன மானே..

ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே..



நிலாவே வா.. செல்லாதே வா..

எந்நாளும் உன் பொன்;வானம் நான்

எனை நீதான் பிரிந்தாலும்;

நினைவாலே அணைப்பேன்...

நிலாவே வா.. செல்லாதே வா..

எந்நாளும் உன் பொன்;வானம் நான்

இதயம் ஒரு கோவில் -- இதய கோவில்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன் (2)

(இதயம் ஒரு)

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜ“வ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜ“வன் ஒன்றுதான் என்ரும் புதிது

(இதயம் ஒரு)

காமம் தேடும் உலகிலே ஜ“வன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜ“வன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜ“வன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

(இதயம் ஒரு)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜ“வன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்ரும் வாழ்கவே

(இதயம் ஒரு)